search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனியன் தொழிலாளர்கள்"

    • தொழிலாளர்கள் ஒரு மாத விடுமுறைக்கு பின் திருப்பூர் திரும்புவார்கள்.
    • பனியன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு வருகிற 24-ந்தேதி ஹோலி பண்டிகை வருவதாலும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாலும் பலர் குழுக்களாக திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த பனியன் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் ஒரு மாத விடுமுறைக்கு பின் திருப்பூர் திரும்புவார்கள்.

    பெரும்பாலும் ஒரு குழு சென்றால் மறு குழு பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களில் திரும்பி விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை வருகிற 24-ந்தேதி முடிந்தவுடன் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.வடமாநிலங்களில் ஜூன் மாதம் வரை பல கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்ப மேலும் காலதாமத மாகும்.

    வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்புவதில் காலதாமதமாகும் என்பதால் பனியன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த ஆண்டில் இருந்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பனியன் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.
    • அவசரமான ஆர்டர் இருந்தாலும் கைவசம் உள்ள வடமாநில தொழிலாளர்களை கொண்டு பணிகளை முடிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.

    திருப்பூர்:

    ஒரு காலத்தில் திருப்பூர் பனியன் தொழில் நகரத்தில், தீபாவளி என்றாலே 10 நாட்களுக்கு முன்பாகவே, பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே போனஸ் வழங்குவார்கள். அதிலிருந்தே, நகரப்பகுதியில் உள்ள கடைகள் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பின் திருப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் மந்தமாகிவிட்டது. கடந்த ஆண்டில் இருந்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பனியன் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி போனஸ் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் போனஸ் பட்டுவாடா தொடங்கி விட்டது. இருப்பினும் பெரும்பாலான பனியன் நிறுவனங்கள் இன்று அல்லது நாளைதான் போனஸ் வழங்க திட்டமிட்டுள்ளன. திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் கடைகளுக்கு வந்து செல்வதால் நகரப்பகுதி கலகலப்பாக காணப்படும். தற்போது பனியன் தொழிற்சாலைகளில் பணி குறைவு என்பதால் தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்கள் வரை விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளனர். அவசரமான ஆர்டர் இருந்தாலும் கைவசம் உள்ள வடமாநில தொழிலாளர்களை கொண்டு பணிகளை முடிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி நாளையுடன் (9-ந்தேதி) உற்பத்தி பணிகளை நிறைவு செய்து விட்டு 10-ந்தேதி முதல் பண்டிகை விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளன. சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள் 19-ந்தேதிக்கு முன்னதாக திரும்ப போவதில்லை. இதனால் 20-ந்தேதிக்கு பின்னரே பனியன் தொழிற்சாலைகளின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும். இதுவரை போனஸ் கிடைக்காத தொழிற்சாலைகளில் எப்படியும் இன்று மாலைக்குள் கிடைத்துவிடும். அதற்குள் கொள்முதல் வேலைகளை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பலாம் எனவும் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். கடைசி நேர கூட்டத்தில் சிக்காமல் முன்கூட்டியே குடும்பத்தினரை பஸ்சில் அனுப்பி வைக்கவும் தொழிலாளர்கள் தயாராகி விட்டனர்.

    சிறப்பு பஸ்கள்

    திருப்பூரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோவில் வழி ஆகிய 3 பஸ் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் (300-க்கும் மேற்பட்ட) பஸ்கள் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், சிவகங்கை, சிவகாசி, தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து தான் சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளதால், அதற்கேற்ப கோவில்வழி பஸ் நிலையத்தை தயார் படுத்தும் பணியில் மாநகராட்சி, போக்குவரத்து கழக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

    ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பஸ் நிலையம் விரிவுப்படுத்தும் கட்டுமான பணி நடந்து வருவதால், கூடுதலான சிறப்பு பஸ்களை பஸ் நிலையத்திற்குள் நிற்க வழியில்லாத நிலைமை உள்ளது. இதனால் பஸ் நிலைய மேற்குபுறத்தில் உள்ள மாநகராட்சி காலியிடத்தை, தூய்மைப்படுத்தி, சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. இந்த இடத்தை ஜே.சி.பி., எந்திரத்தின் உதவியுடன் குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டு, வழித்தட பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் சேறும், சகதியுமாக உள்ள இடங்களில் மண் கொட்டப்படுகிறது. கூடுதலாக பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு பின் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பஸ்கள் நிற்பதற்கு பஸ் நிலையத்தில் இடம் போதியதாக உள்ளது. மேலும் அடுத்தடுத்து பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் வரும் போது, நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்கூட்டியே காலியிடம் தயார்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் இடையூறு இல்லாமல் சென்று வர தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் மின் விளக்குகளும் பொருத்தப்படும். அத்துடன் அப்பகுதியில் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என்றனர்.

    தற்போது ஸ்மார்ட் சிட்டி பணி தொடங்கியதால், பஸ் நிலையத்தில் இருந்த ரேக், மேற்கூரை முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு விட்டது. தற்போது மழை பெய்து வரும் நிலையில், வெயிலின் தாக்கமும் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. குழந்தைகள், குடும்பத்துடன் வரும் பயணிகள் மழை, வெயிலில் படும் சிரமங்களை தவிர்க்க, தற்காலிக நிழற்குடை உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏற்றுமதி வர்த்தகம் போலவே வியாபாரிகள் மற்றும் பிரபல வியாபார நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று ஆடை உற்பத்தி செய்கின்றனர்.
    • புதிய ஆர்டர் வழங்குவது போல் ஆசைவார்த்தை பேசி இத்தகைய வியாபாரிகள் ஏமாற்றி வருகின்றனர்.

     திருப்பூர்:

    திருப்பூரில் பிராண்டட் தொழில் நிறுவனங்கள் தவிர மற்ற ஆடை உற்பத்தியாளர்கள், வியாபார நிறுவனம் மூலம் ஆடைகளை விற்கின்றனர். ஏற்றுமதி வர்த்தகம் போலவே வியாபாரிகள் மற்றும் பிரபல வியாபார நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று ஆடை உற்பத்தி செய்கின்றனர்.எவ்வித முன்பணமும் இல்லாமல் ஆடைகளை தயாரித்து பணத்தை பெற்று சரக்கு அனுப்புவது வழக்கமாக இருந்தது. சில வியாபாரிகள் சுழற்சி முறையில் சரக்கை பெற்று பணத்தை கொடுத்து வர்த்தகம் செய்து வருகின்றனர்.

    நூல் விலையால் முடங்கிய உள்நாட்டு விற்பனை பனியன் தொழில் மீண்டும் எழும் போது வடமாநில போலி வியாபாரிகள் குறி வைத்து தாக்குவதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.புதிய ஆர்டர் வழங்குவது போல் ஆசைவார்த்தை பேசி இத்தகைய வியாபாரிகள் ஏமாற்றி வருகின்றனர்.

    உற்பத்தியாளர்களை கடந்த 4 மாதங்களில் மட்டும் 7 நிறுவனங்கள் ஏமாற்றியுள்ளன. இதுவரை திருப்பூருடன் தொடர்பில் இல்லாதவர்கள் புதிய வியாபாரிகளாக அறிமுகமாகினர். தொடக்கத்தில் நாணயம் மிக்கவர்களாக காட்டிக்கொண்டவர்கள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பனியன் சரக்கை பெற்றதும் தப்பிவிடுகின்றனர்.

    சமீபத்தில் 59 உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் சென்னை தி.நகரில் உள்ள ஒரு நிறுவனத்தை சேர்ந்த ராமச்சந்திரன், ராஜேஷ், ரத்தன் ஆகியோர் பனியன்களை வாங்கி விட்டு பணத்தை தராமல் காலம் கடத்தினர். தொடர்ந்து வற்புறுத்தல் காரணமாக அந்நிறுவனத்தினர் காசோலை கொடுத்தனர்.அவை அனைத்தும் வங்கிக்கு சென்று திரும்பியது தெரிந்தது. அவ்வகையில் மொத்தம் 13 கோடி ரூபாய் வரை ஏமாற்றியது தெரிந்தது.

    பாதிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வர்த்தக நிறுவனத்தின் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இதுதொடர்பாக திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில், எஸ்.ஐ., தலைமையிலான தனிப்படையினர் விசாரித்தனர். முதல்கட்டமாக சென்னை அண்ணா நகரில் உள்ள வர்த்தக நிறுவனத்துக்கு சென்றனர்.அங்கு பூட்டு போடப்பட்டு இருந்தது. திருப்பூரில் உள்ள உற்பத்தி யாளர்களிடம் பெற்ற ஆடைகளை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மார்க்கெட்டில் சப்ளை செய்தது தெரிந்தது. அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர்.

    சென்னை நிறுவனத்திடம் இருந்து பணம் கொடுத்து ஆடைகளை பெற்றதற்கான பில்களை அனைவரும் வைத்திருந்தனர். மோசடி தொடர்பாக 8கடைக்காரர்களை விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் வழங்கி வந்தனர். இதுவரை யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    மோசடியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தை சேர்ந்த 3 பேரும் திருப்பூரில் உள்ள உற்பத்தியாளர்களிடம் 4 மாதங்களுக்கு ஆடைகளை வாங்கும் போது உடனுக்குடன் பணத்தை கொடுத்து வாங்கி, ஆரம்பத்தில் நம்ப வைத்தனர். ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பெயர்களை கூறியும் உள்ளனர்.இதனை நம்பிய உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் அவர்களுடன் வியாபாரத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்துக்கு மேல் திருப்பூரை சேர்ந்த ஏராளமான உற்பத்தியாளர்களிடம் ஆடைகளை வாங்கி கொண்டு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. விசாரணையில் உற்பத்தியாளர்களிடம் தெரிவித்த 3பேரின் பெயரும் பொய்யானது என்பதும் அவர்களின் உண்மையான பெயர் என்னவென்று தெரியவில்லை. நன்கு திட்டமிட்டு நூதனமாக ஏமாற்றியுள்ளனர்.

    மோசடி தொடர்பாக அன்றாடம் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. மோசடி ஆசாமிகள் பெரிய நிறுவனத்திடமும் கைவரிசை காட்டியுள்ளது. சில நிறுவனங்கள் புகார் கொடுக்க முன்வரவில்லை.

    ஏமாற்றியவர்கள் குறித்து தொடர் விசாரணையில் 3 பேரில் ஒருவர் மீது கடந்த 2019ம் ஆண்டு மும்பையில் இதுபோன்ற மோசடி வழக்கு பதிவாகி உள்ளது. அங்கு வேறு ஒரு பெயர் உள்ளது. இவர்கள் இதையே வேலையாக கொண்டு பல இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலமாகியுள்ளது. இவர்கள் பிடிபடும் பட்சத்தில் தான் அவர்களின் உண்மையான விபரம் தெரியவரும்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    • தீபாவளி பண்டிகை முடிந்ததையடுத்து தொழிலாளர்கள் பலர் திருப்பூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். இன்று பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்தனர்.
    • நெல்லை, நாகர்கோவில், மதுரை, சேலம், தேனி, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு திருப்பூரில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். தொழிலாளர்களின் வசதிக்காக ஒரு வாரம் வரை பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

    பண்டிகை முடிந்ததையடுத்து தொழிலாளர்கள் பலர் திருப்பூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். இன்று பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்தனர்.

    இதனால் நெல்லை, நாகர்கோவில், மதுரை, சேலம், தேனி, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டது.

    தொழிலாளர்கள் திரும்பியதையடுத்து திருப்பூரில் மீண்டும் ஆடை உற்பத்தி வேகமெடுக்கும். இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையின் போது குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கும் மேல் தொழிலாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதன் பின்னர் பண்டிகையை முடித்து விட்டு திருப்பூருக்கு திரும்புவார்கள்.

    பல நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை அளித்தன. இன்று பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்பூர் வந்து விட்டனர். இதனால் ஆடை தயாரிப்பு முன்பு போல் தொடங்கி விடும் என்றனர். பனியன் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் திருப்பூர் மாநகரம் கடந்த ஒரு வாரம் வெறிச்சோடி காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலும் சற்று குறைந்து இருந்தது.

    இன்று தொழிலாளர்கள் திரும்பியதால் திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோவில் வழி பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    • தேனி, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • தீபாவளி பண்டிகையின் போது குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கும் மேல் தொழிலாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு திருப்பூரில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். பண்டிகை முடிந்ததையடுத்து தொழிலாளர்கள் பலர் திருப்பூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக நாளை 31-ந்தேதி பெரும்பாலான தொழிலாளர்கள் திரும்ப உள்ளனர். இதனால் நெல்லை, நாகர்கோவில், மதுரை, சேலம், தேனி, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தொழிலாளர்கள் திரும்ப உள்ளதையடுத்து திருப்பூரில் மீண்டும் ஆடை உற்பத்தி வேகமெடுக்கும். இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையின் போது குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கும் மேல் தொழிலாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.இதன் பின்னர் பண்டிகையை முடித்து விட்டு திருப்பூருக்கு திரும்புவார்கள்.

    இதிலும் ஆர்டர்கள் மிகவும் அவசரமாக இருக்கிற சில நிறுவனங்கள் பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களிலேயே தொழிலாளர்களை வேலைக்கு வருமாறு அழைப்பார்கள். ஆனால் தற்போது நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக எதிர்பார்த்த ஆர்டர்கள் இல்லை. இதன் காரணமாக பல நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் விடுமுை றஅளித்துள்ளன. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் நாளை திருப்பூர் வந்து விடுவார்கள். இதன் பின்னர் ஆடை தயாரிப்பு முன்பு போல் தொடங்கி விடும் என்றனர்.

    மேலும் சில உற்பத்தியாளர்கள் கூறுகையில்,

    தற்போதைய நிலவரப்படி ஏற்றுமதி நிறுவனங்களில் அவசர ஆர்டர்கள் இல்லை. பெரிய நிறுவனங்களிடம் ஆர்டர் எடுத்து ஆடை தைத்து கொடுக்கும் குறு, சிறு பனியன் யூனிட்களிலும் பணி குறைவாகவே உள்ளது.இதனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான குறு, சிறு பின்னலாடை யூனிட்களுக்கு நவம்பர் 10ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் கைவசம் உள்ள தொழிலாளரை கொண்டு உற்பத்தியை தொடர திட்டமிட்டுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகு பின்னலாடை உற்பத்தியைத் துவக்கினாலும் அது வேகமாக இல்லை.

    சொந்த நிலம் உள்ள வெளி மாவட்ட தொழிலாளர்கள், தீபாவளி பண்டிகைக்கு சென்று, போனசை பயன்படுத்தி, விவசாய பணிகளை துவக்குவது வழக்கம்.இந்தாண்டு பருவமழையும் கைகொடுத்துள்ளதால், பண்டிகைக்கு சென்ற தொழிலாளர் விவசாய பணியை துவக்கியிருப்பர். ஒரு சிலர் அங்கேயே தங்கிவிட்டு மற்றவர்கள் திருப்பூர் திரும்புவதுண்டு.

    பெரும்பாலான நிறுவனங்களில் 10 நாட்கள் வரை தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக பணிக்கு வர விரும்பினால் வரலாம் என்றும் தெரிவித்துள்ளோம்.

    வடமாநில தொழிலாளரை கொண்டு உற்பத்தியை தொடர்கிறோம். சில நிறுவனங்கள் கைவசம் உள்ள தொழிலாளரை கொண்டு பராமரிப்பு பணியை செய்து வருகின்றனர்.வரும் நவம்பர் மாத இறுதியில் புதிய ஆர்டர் வந்து உற்பத்தி முழு வேகமெடுக்கும்.அதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர் என்றனர்.

    • துணைத் தலைவா் கே.எம்.இசாக் கொடியேற்றினாா். பொதுச் செயலாளா் என்.சேகா் வேலை அறிக்கை வாசித்தாா்.
    • பனியன் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

     திருப்பூர்:

    ஏ.ஐ.டி.யூ.சி. பனியன் பேக்டரி லேபா் யூனியன் 41-வது மகாசபைக் கூட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவரும், திருப்பூா் மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.எம்.இசாக் கொடியேற்றினாா். பொதுச் செயலாளா் என்.சேகா் வேலை அறிக்கை வாசித்தாா். பொருளாளா் எஸ்.செல்வராஜ் வரவு- செலவு அறிக்கை வாசித்தாா். ஏஐடியூசி. மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாவட்டத் தலைவா் சி.பழனிசாமி, மாவட்ட பொருளாளா் பி.ஆா். நடராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டம் முழுவதும் பனியன் தொழிலாளா்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்னதாகவே கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு முறையாக போனஸ் வழங்கப்படுகிறதா என்பதை, தொழிற்சாலை ஆய்வாளா்களும், மாவட்ட நிா்வாகமும் கவனிக்க வேண்டும். அப்படி கிடைக்காவிட்டால் தொழிலாளா்கள் தொழிற்சங்கத்தை இணையத்தில் அணுகலாம். நூல் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். நூல் விலையை குறிப்பிட்ட காலம் வரை உயராமல் பாா்த்துக்கொள்ள மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பனியன் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பனியன் தொழிற்சாலைகளில் சுத்தமான குடிநீா், உணவு அருந்துமிடம், ஓய்வறை, மருத்துவ முதலுதவி, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு குறித்த புகாா் பெட்டி உள்ளிட்ட சட்டப்படியான வசதிகள் எதுவும் அமலில் இல்லை. தொழிற்சாலை ஆய்வாளா்கள், தொழிலாளா் நலச்சட்டங்களை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×